அம்பாறையில் காட்டு யானை தாக்கி இருவர் பலி
அம்பாறை - பானம வாவிக்கு அருகில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன், மீன்பிடி தொழிலுக்கு சென்ற இருவர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் 58 மற்றும் 59 வயதுகளையுடைய மீனவர்கள் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, வாவியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்ததாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன், மீன்பிடி தொழிலுக்கு சென்ற இருவர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் 58 மற்றும் 59 வயதுகளையுடைய மீனவர்கள் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, வாவியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்ததாக குறிப்பிடப்படுகின்றது.