காணாமல் போன இளைஞன் குளத்தில் இருந்து சடலமாக மீட்பு!! நடந்தது என்ன??- படங்கள்
கிளிநொச்சியில் சிறு குளம் ஒன்றில் இருந்து இளைஞனின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
புன்னைநிராவி 26 ம் வாய்க்காலைச் சேர்ந்த 31 வயதான சுபாஸ் என்ற இளைஞனின் சடலம் இன்று பிற்பகல் தர்மபுரம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 23 ம் திகதியில் இருந்து காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த குறித்த இளைஞனே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் தர்மபுரம் பொலிசார் மற்றும் கிளிநொச்சி குற்ற தடயவியல் பொலிசார் இணைந்து மீட்டுள்ளனர்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
புன்னைநிராவி 26 ம் வாய்க்காலைச் சேர்ந்த 31 வயதான சுபாஸ் என்ற இளைஞனின் சடலம் இன்று பிற்பகல் தர்மபுரம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 23 ம் திகதியில் இருந்து காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த குறித்த இளைஞனே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் முன்னிலையில் தர்மபுரம் பொலிசார் மற்றும் கிளிநொச்சி குற்ற தடயவியல் பொலிசார் இணைந்து மீட்டுள்ளனர்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.