நான் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியிருக்க வேண்டும்: பிரபல நடிகையின் சர்ச்சை கருத்து
கடந்த சில மாதங்களில் இந்த இயக்கம் இந்தியாவில் வேகம் பிடித்தது. திரைப்பட நடிகர்கள், கவிஞர்கள், தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் தங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பல பெண்கள் புகார் செய்தனர்.
இந்நிலையில் இந்த மீடூ குறித்து பாலிவுட்டின் பிரபல நடிகை ப்ரீத்தி ஜிந்தா கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவரிடம், நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறீர்களா?" என்று கேட்கப்பட்டபோது, கலகலவென்று சிரித்த அவர், "நான் அப்படி துன்புறுத்தலுக்கு உள்ளாகவில்லை. அப்படி உள்ளாகி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது உங்களுக்குச் சொல்ல என்னிடம் பதில் இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
Q. Did you ever have a #MeToo experience?— Prasanto K Roy (@prasanto) 18 November 2018
A. Giggle. Giggle. Ha ha. I wish I had!!!
"Aaj ki sweetu, kal ki metoo ho sakti hai, ha ha": The lovely @realpreityzinta does some unexpected victim shaming pic.twitter.com/F0Rc05Cbws