13 வயது சிறுமி மீது தமிழரசுக் கட்சி சமாதான நீதவான் வல்லுறவு முயற்சி!!
கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் 11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய
முற்பட்ட சமாதான நீதவான் உட்பட இருவரை கிளிநொச்சி பொலீஸார் கைது செய்யதுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மாலை ஏழு மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்றுவிட்டு
பேருந்தில் வந்த சிறுமி கண்டாவளை பிரதேச செயலகம் அருகில் இறங்கி வீடு செல்வதற்கு நடந்த
சென்ற போது வீதியில் இருபுறமும் உள்ள பற்றைக்குள் மறைந்திருந்த பெரியகுளத்தைச் சேர்ந்த
சமாதான நீதவான் குறித்த சிறுமியை வாயை பொத்திப் பிடித்தப்படி பற்றைக்குள் இழுத்துச்
சென்றுள்ளார்.
அவருடன் பிரிதொரு நபரும் சென்றுள்ளார்.
இதன் போது குறித்து சிறுமி கதறி கூக்குரல் எழுப்பிய போது இழுத்துச் சென்றவரின் கையை
கடித்து விட்டு வீதிக்கு தப்பியோடியுள்ளார். இதன் போது குறித்த சிறுமியின் சகோதரனும்
அவ் வீதியால் பயணித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் சகோதரன் அவர்களை தாக்குதவதற்கு
விரைந்த போது ஒருவன் தப்பிச் சென்ற நிலையில் ஒருவனை தாக்கியுள்ளார்.
பின்னர் கிளிநொச்சி பொலீஸ் சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதோடு சிறுமி
வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பொலிஸார் இன்று சமாதான நீதவான்
உட்பட இருவரையும் கைது செய்துள்ளனர்.