யாழில் பெறுமதியான பொருட்களை திருடிய கும்பல் சிக்கியது.
யாழ். நகரப்பகுதிகளில் 10 லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருட்களை களவெடுத்த திருடர்களையும் திருடிய பொருட்களை வாங்கிய நபர்களையும் யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்கள்.
யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கான கட்டிடம் நிர்மாணிக்கும் இடத்திலிருந்து, கட்டிட பொருட்கள் மற்றும், ரில்டர் உள்ளிட்ட 5 லட்சம் பெறுமதியான பொருட்களை திருடி விற்பனை செய்தவர்களும், யாழ்.நகரப் பகுதிகளிலுள்ள கடைகளில் திருடி விற்பனை செய்துள்ளார்கள்.
இவ்வாறு 3 இடங்களில் திருடிய இலத்திரனியல் பொருட்கள் மற்றும் கட்டிட நிர்மாணப் பணி செய்யும் இலத்திரனியல் பொருட்கள், என்பன திருடிய யாழ்ப்பானம் நாவாந்துறை மற்றும் பொம்மைவெளி, கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த சுமார் 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்கள்.