17 வயது சிறுமியிடம் உனக்கு நான் இதை வாங்கி தருகிறேன் என்று கூறி கற்பழித்த மன்மதன்...

வகங்கை மாவட்டம் தாயமங்கலத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 30), சரக்கு ஆட்டோ டிரைவர். இவர் அடிக்கடி திருவாடானை சந்தைக்கு சரக்குகளை ஏற்றி வருவது வழக்கம். இங்கு வரும்போது திருவாடானை அருகே உள்ள சப்பாணியேந்தலை சேர்ந்த 17 வயது சிறுமி ஒரு வருடன் பழக்கம் ஏற்பட்டது. 

இதனை பயன்படுத்தி சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி மோகனசுந்தரம் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதுபற்றி தெரியவந்ததும் மோகனசுந்தரத்திடம் திருமணம் செய்யும்படி சிறுமியின் உறவினர்கள் வற்புறுத்தினர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் திடீரென தலைமறைவாகி விட்டார். 

அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. எனவே திருவாடானை அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தந்தை புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி மோகனசுந்தரத்தை கைது செய்தார்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad