கள்ளகாதல் -கணவனை கொலை செய்த மனைவி!

 


காதலனுடன் தனிமையில் இருந்த மனைவியை கண்ட கணவனை கொலை செய்து மறைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சிபேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் முருகன்(38). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்துள்ளார். இவரின் மனைவி வனஜா(30), இந்த தம்பதிக்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இதனிடையே, வனஜாவுக்கும் அப்பகுதியில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவரின் பழக்கம் கிடைத்துள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறியுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக நீடித்து வந்த நிலையில், கணவன் முருகன் இந்த விஷயம் அறிந்து பல முறை இருவரையும் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி முருகன் மர்மமான முறையில் அவரது வீட்டின் அருகே இறந்து கிடந்துள்ளார். மேலும், தனது கணவர் குடிபோதையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி வனஜா கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய அவரது உறவினர்கள் முருகனின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால், முருகன் உடம்பில் காயம் இருந்ததால் அப்பகுதி மக்கள் முருகன் சாவில் சந்தேகம் உள்ளது என்று போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து வனஜாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, நானும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் கிருஷ்ணகுமார் கடந்த ஐந்து வருடமாக நெருக்கமாக இருந்து வந்தோம். இதன்பின் நாங்கள் இருவரும் தனிமையில் இருப்பதை கணவர் கையும், களவுமாக பிடித்ததால், அவரை கழுத்தை நெரித்து காதலன் உதவியுடன் கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

இதனால், போலீசார் கிருஷ்ணகுமார் மற்றும் வனஜா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad