இந்த நாட்டில் இரண்டு திருமணம் செய்யாத ஆண்களுக்கு சிறை தண்டனை.

ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலையொட்டி உள்ள எரித்திரியா என்னும் சிறிய நாடான இங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

அத்தோடு அடிக்கடி போர்களை சந்தித்து வருவதால் இந்த நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டன.

இதனால் பல பெண்கள் திருமணம் ஆகாமலேயே காலத்தை தள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதனால் இதனை தடுக்கும் வகையில் எரித்திரியா நாட்டில் புதிய விசித்திர சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி ஆண்கள் அனைவரும் கட்டாயம் 2 திருமணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2க்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொண்டாலும் அது குற்றமாக கருதப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு கணவரின் முதல் மனைவி இந்த திருமணத்தை எதிர்க்கக் கூடாது அவ்வாறு எதிர்த்தால் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad