யாழ்தேவி ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற யுவதியால் பரபரப்பு!

யாழ்தேவி ரயிலில் பாய்ந்த உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற யுவதி ஒருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

மாத்தறை பகுதியை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு நடந்த கொண்ட போதும், பொலிஸார் உடனடி நடவடிக்கை காரணமாக காப்பாற்றப்பட்டுள்ளார்.

வீட்டில் சகோதரர்கள் திட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கல்கமுவ பிரதேசத்தில் ரயில் வீதிக்கு அருகில் நின்ற சந்தர்ப்பத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் சகோதரர்கள் தொடர்ந்து தன்னை அடிப்பதனால் இவ்வாறு தற்கொலை செய்துக் கொள்ள தான் அங்கு வந்ததாக குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

இந்த மாணவி கடந்த 11ஆம் திகதி காலை 7.30 மணியளவில் பகுதி நேர வகுப்பிற்கு செல்வதான கூறி, வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து மாத்தறையில் இருந்து பல பஸ்களில் ஏறி கல்கமுல பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

கல்கமுவ பிரதேசத்திற்கு அருகில் வடக்கு ரயில் வீதியில் நின்ற சந்தர்ப்பத்தில் இந்த மாணவி மீது சந்தேகம் கொண்ட பிரதேச மக்கள் கல்கமுவ பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். தகவல் கிடைத்தவுடன் விரைந்து செயற்பட்ட பொலிஸார் குறித்த யுவதியை கைது செய்துள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது யுவதி மேற்படி விபரங்கள் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளினால் இந்த யுவதியின் பெற்றோரை அழைத்து இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த யுவதி தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் பொலிஸார் செயற்பட்டிருக்கவில்லை என்றால் அவர் யாழ்தேவி ரயிலில் மோதுண்டு உயிரை விட்டிருப்பார் என கல்கமுவ மக்கள் தெரிவித்துள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad