கூடுவிட்டு கூடு பாய்ந்து சசிகலாவை தப்பிக்க வைக்க முயற்சி செய்த மந்திரவாதி

பெரம்பலூரையே அதிர வைத்த மத்திரவாதியின் செயல் பொதுமக்களை மட்டு மின்றி போலீசாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 10-ந்தேதி பெரம்பலூர் எம்.எம். நகரில் உள்ள பங்களா வீட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசாருக்கு அங்கு கண்ட ஒவ்வொரு காட்சியும் நடு நடுங்க வைத்தது.

வீட்டின்அனைத்து அறைகளிலும் 20-க்கும் மேற்பட்ட மண்டை ஓடுகள், மந்திர தகடுகள், மாந்திரீகம் தொடர்பான புத்தகங்கள், மை டப்பாக்கள், ஆண்மை விருத்தி மற்றும் ஆஸ்துமா நோய்க்கு பயன்படுத்தப்படும் 40 கடல் குதிரைகள், ஆவிகளுக்கான சிலைகள் இருந்தன.

இதற்கெல்லாம் மேல் மரப்பெட்டியில் அழுகிய நிலையில் பெண்ணின் உடலும் இருந்தது. அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற போலீசார் அங்கிருந்த மந்திரவாதி கார்த்திகேயன், அவரது மனைவி நசீமா ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

போலீசார் கார்த்திகேயனை கைது செய்து வெளியே அழைத்து வரும்போது, எனக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுங்கள் என்று கேட்டார். எதற்கு என்று போலீசார் கேட்டபோது, சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை வெளியே கொண்டு வருவதற்கான அகோரி பூஜையின் உச்சக்கட்டத்தில் உள்ளேன்.

அதற்காக இளம்பெண்ணின் பிணத்தின் மீது அமர்ந்து பல்வேறு பூஜைகள் செய்து எனது மாந்திரீக சக்தியை பெருக்கிக்கொண்டேன். கூடு விட்டு கூடு பாயும் நேரம் பார்த்து நீங்கள் என்னை கைது செய்துவிட்டீர்கள். நான் இந்த இடத்தை விட்டு வெளியே சென்றுவிட்டால் மீண்டும் அந்த சக்தியை பெறுவது கடினம்.விரைவில் சசிகலாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வரும் முயற்சிக்கு வாய்ப்பு தாருங்கள் என்றும், சசிகலாவை முதல்வராக்க நரபலி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னிடம் 2 ஆயிரம் ஆவிகள் உள்ளன, அதனை யார் மீது வேண்டுமானாலும் ஏவலாம் என்று கூறியதை கேட்ட போலீசார் வெலவெலத்து போனார்கள். மந்திரவாதி என்ற பெயரில் சைக்கோபோல் செயல்படும் கார்த்திகேயன் உண்மையிலேயே ஆவிகளுடன் பேசியிருப்பாரா? என்ற சந்தேகத்துடன் அவரை அழைத்து சென்று பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர் பொலிசார்.

மேலும், கார்த்திகேயன் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அடிக்கடி மந்திரவாதியின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்கும். நாங்கள் பயத்தில் வெளியில் எட்டிக்கூட பார்க்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad