14 வயது சிறுமியை 55 வயது முதியவருக்கு திருமணம் செய்து வைத்த தாய்!

 


வேலூர் அருகே 14 வயது மகளை 55 வயதான முதியவருக்கு தாயே திருமணம் செய்து வைத்த கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

வேலூர் அடுத்த கருகம்பத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை இழந்த நிலையில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு 14 வயது மகள் உள்ளார். தனது இரண்டாவது கணவருக்காக, தனது மகளை அவரது அண்ணன் லோகநாதன் என்பவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்துள்ளார். அவருக்கு வயது 55. ரகசியமாக அவர் அந்த திருமணத்தை நடத்தி முடித்ததாக தெரிகிறது.  

இந்த நிலையில், சிறுமி கருவுற்றுள்ளார். கருவை கலைக்க அவரது தாயார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுமிக்கு 14 வயதிலேயே 55 வயதான முதியவருடன் திருமணம் செய்து வைத்தது மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த அதிகாரிகள் சிறுமியை அவரது தாயிடம் இருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் தாய் மற்றும் லோகநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad