யாழில் புறா கடத்தல். 50க்கு மேற்பட்ட புறாக்கள் தீயில் கருகியது.

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட புறாக்கள் நெடுந்தீவில் மறைத்து வைத்திருந்தபோது கடற்படையினர் கண்டுகொண்டதனால் புறாக்களை உயிரோடு தீயிட்டுக் கொழுத்திய கொடுரம் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் இருந்து இரு தினங்களிற்கு முன்னர் 144 புறாக்கள் கடல் வழியாக கடத்தி வரப்பட்டு நெடுந்தீவில் ஓர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. மறைத்து வைத்திருக்கும் புறாக்களை பகுதி பகுதியாக யாழ்ப்பாணம் கடத்த திட்டமிட்டனர். இதில் முதல் கட்டமாக நேற்றைய தினம் 44 புறாவை குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்டபோது 44 புறாக்களுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மேலும் நூற்றிற்கும் மேற்பட்ட புறாக்கள் நெடுந்தீவில் மறைத்து வைத்திருக்கும் தகவலை உறுதி செய்தனர்.

மறைத்து வைத்திருக்கும் புறாக்களை மீட்பதற்காக
பொலிஸார் வருவதனை அறிந்த வீட்டின் உரிமையாளர்கள் புறாக்கள் அடைத்து வைத்திருந்த இடத்திற்கு மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

தீயின் காரணமாக சுமார் 50 வரையான புறாக்கள் இறந்தும், துடிதுடிப்பதையும் அவதானத்த பொலிஸார் எஞ்சிய புறாக்களின் உயிரை காக்கும் நோக்கில் கூட்டை திறந்து விட்டுள்ளனர். கூடு திறக்கப்பட்டதனால் எஞ்சிய புறாக்கள் கூட்டை விட்டு வெளியே பறந்து உயிர் தப்பியுள்ளது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad