கணவனை வேறு பெண்களுடன் உல்லாசமாக இருக்க வைத்து ரசித்த மனைவி கைது.

இலங்கையைச் சொந்த இடமாகக் கொண்ட 39 வயதான சிங்கள குடும்பப் பெண்ணான அருசிந்த நேகினி இத்தாலியில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியின் Bologna வில் புறநகர்ப் பகுதியில் வசித்து வந்த குறித்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அருசிந்த நேகினி குறித்த பகுதியில் ஆடை வடிவமைப்பு மற்றும் அலங்கார கேக் போன்றவற்றை தயாரிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். அவளது கணவன் அப்பகுதியில் உள்ள விவசாய நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்துள்ளார். அருசிந்த நேகினியுடன் நெருங்கிப் பழக்கமான அப்பகுதியைச் சேர்ந்த இளம் யுவதிகள் மற்றும் குடும்பப் பெண்களை தனது கணவனுடன் நெருங்கிப் பழகச் செய்து கணவன் அவர்களுடன் உல்லாசமாக இருப்பதை மறைவிலிருந்து பார்த்து ரசிக்கும் மனபிறழ்வுக்குள்ளான செயற்பாட்டை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவனுடன் உல்லாசமாக இருந்த இத்தாலிய பெண் ஒருவர் பொலிசாரிடம் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தகவல் உண்மை என்பதையடுத்து அருசிந்த நேகினியைப் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.

மனைவியின் இந்த நடவடிக்கை கணவருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம் என பொலிசார் கருதி கணவரையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. அருசிந்த நேகினியை பொலிசார் நீதிமன்றத்தின் அனுமதியுடன் உளவள நிபுணரிடம் ஆலோசனைக்கு அனுப்பி அறிக்கை பெற்றுள்ளதாகவும், அருசிந்த நேகினி Cornuta contenta என்ற மனச் செயற்பாட்டில் உள்ளவர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலியப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad