யாழில் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த 25 இந்திய மீனவர்கள் கைது.

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் (15) இன்றும் (16) இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.

கைதான 25 பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக கைதான மீனவர்கள் மற்றும் படகுகளும் காங்கேசன்துறை கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அதேவேளை யாழில் கைதானவர்கள் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கபப்டுகின்றது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad