யாழில் பிரபல மோட்டார் சைக்கிள் திருடன் கைது.

யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரின் இந்த கைது நடவடிக்கையின் போது, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று பாழடைந்த கட்டடத்தில் மறைத்து விடப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் (25-06-2023) யாழ் சிவன் கோவிலில் வழிபடச் சென்றவர் வீதியோரமாக மோட்டார் சைக்கிளை தரித்துவிட்டுள்ளார். இதேவேளை தலைக் கவசத்தையும் விட்டுச்சென்றுள்ளார்.

பின்னர், வழிபாடு முடித்து வீடு திரும்ப முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றதடுப்பு பொலிஸார் பண்டதரிப்பை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.

பாழடைந்த கட்டடத்துக்குள் மறைத்து விடப்பட்டிருந்த திருடிய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

மேலும், கடந்த மாதம் யாழ்ப்பாணம் மாநகரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் பளை, கொடிகாமம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுடனும் சந்தேக நபருக்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.

மேலதிக விசாரணைகளின் பின் சந்தேக நபர் இன்றையதினம் (27-06-2023) நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad