யாழில் மின்சாரம் தாக்கி 17 வயது இளைஞன் பலி.

இன்றிரவு (16) யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கரத்தை – துணைவி பகுதியைச் சேர்ந்த அருள்ஜீவன் பிரசாத் (வயது 17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் ஆறுகால்மடம் பகுதியில் உள்ள வாகன சேவிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றார். இதன் போது இன்றைய தினம் அங்கு பணிபுரியும்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது.

இவ்வாறு மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad