பெற்ற தாய்யை வெட்டி கொன்ற மகன்: பதற வைக்கும் பின்னணிக் காரணம்!!

திருவாரூரில் மகன் ஒருவன் பெற்ற தாயை வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்துப்பேட்டை, விளாங்காட்டை சேர்ந்த சுபாஷ்சந்திரபோஸ் என்ற நபரே தனது 60 வயது தாய் பத்மவாதியை கொன்றுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சுபாஷ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பத்மாவதி தனது மூன்று மகள் மற்றும் ஒரே ஒரு மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கடைசி மகளுக்கு திருமணம் செய்ய வீட்டுமனையொன்றை தனது மகன் மூலம் விற்றுள்ளார்.

இந்நிலையில், மகன் சுபாஷ்சந்திரபோஸ் வீட்டுமனை விற்றபணத்தை தாயிடம் தராமல் செலவழித்ததாக தெரிகிறது. இதுகுறித்து பத்மாவதி விபரம் கேட்க ஆத்திரமடைந்த சுபாஷ்சந்திரபோஸ் வீட்டிலிருந்த கோடாலியால் பத்மாவதியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவந்த பத்மாவதி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாக இருந்த சுபாஷ்சந்திரபோஸ் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதி மன்றத்தில் சரணடைந்துள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி சுபாஷ்சந்திரபோசை அக்டோபர் 7ம் திகதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து சுபாஷ்சந்திரபோஸ் திருத்துறைப்பூண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad