200 மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை? கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பரிதாபம்!!

அமெரிக்காவில் 200 மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை செய்து வருபவர் Randi Lynn Zurenko(33). இவர் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக பொலிசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில், கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் தன்னை பூங்காவிற்கு அழைத்துச் சென்று மசாஜ் செய்யும் படியும், தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும்படி வற்புறுத்தியும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.

மேலும் ஒரு மாணவர் இவருடன் தனக்கு 2015 ஆம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டதாகவும், அன்று முதல் அவர் தன்னிடம் பலமுறை உடலுறவு வைத்துள்ளதாகவும், தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தாகவும் கூறியுள்ளார்.

இதுவரை இவர் 200 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும், மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், இது மிகவும் வருத்தப்படக் கூடிய செயல் என்றும் இது போன்ற செயலில் ஈடுபட்ட ஆசிரியை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொலிசார் ஆசிரியையை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், அதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை பொலிசார் ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad