தாத்தா வீட்டிற்கு சென்ற சிறுமியை பலாத்காரம் செய்த ..

புதுச்சேரியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது தாத்தா வீட்டு பகுதியில் உள்ள ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.

ளிஞ்சல்மேடு சுனாமி குடியிருப்பை சேர்ந்த வரதராஜ் என்பவரின் மகள் சரஸ்வதி.

இவருக்கு வயது 14. கடந்த 8-ஆம் தேதி தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார், அன்று அங்கேயே தூங்கிவிட்டு மறுநாள் காலை வீட்டிற்கு வந்ததும் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த சிறுமி, அதே பகுதியை சேர்ந்த மதன் என்பவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனை வெளியே சொன்னால் தந்தை மற்றும் அண்ணனை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். அதனால் யாரிடமும் கூறாமல் மறைத்ததாக கூறினார்.   இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி இந்த குற்ற செயலில் ஈடுபடுபட்டதாக கூறப்பட்ட மதனை தீவிரமாக தேடி வந்த போலீசார் அந்த பகுதியை சேர்ந்த தன்ராஜ் என்பவரை கைது செய்தனர்.

இவர் தான் மதன் என்ற பெயரில் சிறுமியிடம் பழகி அவரை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad