பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது இவ்வளவு ஈஸியா…?

ஈர்ப்பும் கவர்ச்சியும் பரவசமூட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெண்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது ஒரு கலை. அது அவ்வளவு எளிதாக ஆண்களுக்கு வாய்ப்பதில்லை. ஆண், பெண்ணிடம் தோற்றுப்போகும் சில இடங்களில் இதுவும் ஒன்று.

இந்த விஷயத்தில் பெண்களை நேர்த்தியாகக் கையாளத் தெரியவில்லை என்றால் அது வன்முறையாக மாறிவிடும். எப்படித்தான் பெண்களைக் கையாள்வது என்ற கேள்விக்கு ஆண்கள் தினமும் விடை தேடிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

பெண்களுடைய உடலில் எந்த இடத்தை, எப்படித் தொட வேண்டும். அவர்கள் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை எப்படி புரிந்து கொள்வது, எந்த நேரத்தில் பெண்ணுக்கு என்ன தேவை ? இதையெல்லாம் அறிந்து செயல்படும் ஆண்கள் மிகக் குறைவு. எப்படி தான் பெண்களைப் பரவசப்படுத்துவது?

பெண்ணை நெருங்கும்போது முதலில், உங்களுடைய அழகான புன்னகையை அவர்களுக்குப் பரிசாகக் கொடுங்கள். அதன்பின் உங்கள் விருப்பத்தை தெரியப்படுத்துங்கள்.

பெண்ணை கண் இமைக்காமல் அன்பாக சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள். இந்த அன்பான பார்வைக்கு எப்போதுமே பெண்கள் ஏங்குவார்கள். பிறகென்ன நிச்சயம் உங்கள் பார்வை அவர்களை நெருப்பாய் பற்றிக் கொள்ளும். ஏனென்றால், பெண்களுடைய கண்கள் காந்தம் போல் ஈர்ப்புடையது. அதைத் தொடர்ந்து பார்ப்பதற்கே உங்களுக்கு தனித்திறமை வேண்டும்.

உங்கள் புன்னைகையிலும் பார்வையிலும் பெண்கள் மயங்கிவிட்டாலே உங்களுக்கு கிரீன் சிக்னல் தான். மெல்ல அவர்களை நெருங்கலாம். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் பெண்கள் இருப்பார்கள். அதனால். உங்கள் முழு பலத்தோடு நெருங்காமல் பூப்போல் மென்மையாகக் கையாளுங்கள்.

காது மடல்கள் மற்றும் கழுத்தின் கீழ் பகுதிகளில் மிகவும் மென்மையாக, உங்கள் விரல்களை அலைய விடுங்கள். அந்த சுகத்தை விரும்பாத பெண்களே இருக்க மாட்டார்கள். அந்த வருடல் பெண்களுடைய உடலில் ஒருவித நடுக்கத்தை உண்டாக்கும். அந்த சமயத்துக்காக காத்திருந்து முத்தமிடுங்கள். முதலில் ஆண்கள் முத்தமிடுவதைத் தான் பெண்கள் விரும்புகிறார்கள். அவர்களிடம் முதலில் முத்தமிடும்படி கட்டாயப்படுத்தக்கூடாது.

மென்மையாக முத்தமிடும்போது பெண், ஆணை நேராகப் பார்த்து முகத்தைத் திருப்பும்போது, யோசிக்காமல் அவர்களுடைய உதட்டை கவ்விக் கொள்ளலாம். அந்த தருணத்துக்காகத் தான் பெண் ஆணை நேராகப் பார்த்து, அதேசமயம் கண்களை மூடிக்கொள்கிறார்கள். அவர்கள் மனதுக்குள் நினைப்பது போல் நீங்கள் நடந்து கொண்டால், பெண்கள் தங்களையே மறந்து ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

பெண் உறவு கொள்ள நினைக்கும் ஆண், அவளுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டவராக இருக்க வேண்டும் என்பதே அவளுடைய முதல் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதனால், பெண்ணின் உணர்ச்சிகளையும் தூண்டும்படியான புகழ்ச்சியை பெண் எதிர்பார்க்கிறாள். அவளுடைய அங்க அழகுகளைப் பற்றி ஆண் பேசுவதைக் கேட்பதிலேயே பெண்கள் பாதி பரவசத்தை எட்டி விடுகிறார்கள்.

பெண்களுடைய உடல்மொழியைப் புரிந்து கொண்டு, பெண்ணின் உடலைக் கையாள்வது மிக முக்கியம். தனக்கு ஆணிடம் என்ன வேண்டும் என்பதை பெண்கள் உடல்மொழியிலேயே சொல்லிவிடுவார்கள். ஆனால், பெரும்பாலான ஆண்கள் அதைப்புரிந்து கொள்ள முடியாத மக்குகளாகவே இருக்கிறார்கள். பெண்கள் மார்புகளுக்குக் குறுக்கே இரண்டு கைகளையும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டால், அவர்களுக்கு உங்கள் மேல் இப்போது விருப்பம் தோன்றவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad