பெண்களுக்கு எந்த இடத்தில் முத்தமிட்டால் உணர்ச்சிகள் அதிகமாகும் தெரியுமா…?

ஒவ்வொரு முத்தமும், மனதின் அடி ஆழம் வரை சென்று சந்தோஷ உணர்வை கிளறிவிடும். முத்தத்தால் உடலும், மனமும் பெறும் நன்மைகள் ஏராளம்.
முத்தம் என்பது உதடுகளின் சந்திப்பு மட்டுமல்ல. அது காதலின் சங்கமம், பாசத்தின் பிணைப்பு, ஆசையின் பிரதிபலிப்பு. ஒவ்வொரு முத்தமும், மனதின் அடி ஆழம் வரை சென்று சந்தோஷ உணர்வை கிளறிவிடும். முத்தத்தால் உடலும், மனமும் பெறும் நன்மைகள் ஏராளம். அவை என்னவெல்லாம் என்று பார்ப்போம்!

* முத்தம் கொடுக்கும்போது மன அழுத்தமும், மனக் கவலையும் நீங்கும். ‘பிரெஞ்ச் கிஸ்’ எனப்படும் உதடுகள் பிணைந்த முத்தம் கொடுத்தால் தலைவலி, மன அழுத்தத்தி லிருந்து விடுபடலாம். முத்தத்திற்கு கவலையை போக்கும் சக்தியும் இருக்கிறது.


* முத்தம் கொடுப்பது ஒரு வகையான உடற்பயிற்சி. முத்தச் செயல் உடலில் 8 முதல் 16 கலோரிகளை எரிக்கக்கூடியது.

* தியானம் செய்வதற்கு ஈடானது முத்தம் கொடுப்பது என்கின்றனர் மனநல நிபுணர்கள். தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கும். அதேபோல முத்தம் கொடுப்பதன் மூலம் பெறுபவருக்கும், கொடுப்பவருக்கும் மன இறுக்கம் தளர்ந்து உற்சாகம் பிறக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும்.

* பஞ்சம் இல்லாமல் உடல் முழுக்க முத்தமிடலாம். உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு இடத்திலும் முத்தமிடும்போது ஒவ்வொரு விதமான இன்பத்தை உணர முடியும். கழுத்து, மார்பு, வயிறு, தொடை, பாதம் போன்ற இடங்களில் இடப்படும் முத்தங்கள் அதிக இன்பத்தைத்தரும்.

* இரு கன்னங்களையும் கைகளால் பற்றி, பெண்ணின் நெற்றிப் பொட்டில் கொடுக்கும் முத்தம், உச்சபட்ச அன்பின் வெளிப்பாடாகும். நம்பிக்கையை அதிகரிக்கும் இந்த முத்தம். மனைவியின் மனதிலும் நேசத்தை பலமடங்கு பெருக்கும்.

* மூக்குகள் உரசிக் கொள்ளும் வகையில் பெற்றோர் பிள்ளைகளுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் கொடுக்கும் முத்தம் எஸ்கிமோக்கள் முத்தம் எனப்படும். பாசத்தின் வெளிப்பாடு இந்த முத்தம்.

* முக்கியமான வேலைகளுக்கு கிளம்பும்போது முத்தம் கொடுத்துச் சென்றால் அந்த வேலை இனிதாக அமைவதுடன், எளிதாகவும் முடியும் என்று பல தம்பதிகள் நம்பு கிறார்கள். பலர் தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு முத்தம்கொடுத்துவிட்டு தங்களது அன்றாட பணிகளைத் தொடங்குகிறார்கள்.

* மது அருந்துவதால் போதை ஏற்படுவதுபோல, மனதுக்குப் பிடித்தமானவர் களுக்கு முத்தம் கொடுப்பதும் போதையையும், கிளர்ச்சியையும் உண்டாக்கும். முத்தம் ஆக்சிடோசினை வெளிப்படுத்துவதால் முத்தத்தின் பின்பு உடல் நெகிழ்ச்சியாகும்.

* சிலருக்கு முத்தம் என்றாலே அலர்ஜி ஏற்படும். அதற்கு ‘பிலிமாபோபியா’ என்று பெயர். முத்தத்தை பற்றிய படிப்புக்கு ‘பிலிமெடாலஜி’ என்று பெயர்.

* குழந்தையில்லாத தம்பதிகள் அடிக்கடி முத்தமிடுவது நல்லது. அதனால் பெண்ணின் சினை முட்டையின் வளர்ச்சி தூண்டப்படும் என்கிறார்கள்.


* ஒரு தாய், குழந்தைக்கு முத்தமிடுவதால் குழந்தையின் செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

* முத்தம் கொடுக்கும்போது பெண்களின் கருப்பையின் செயல்பாடு மேம் படும். முத்தத்தால் கருப்பை நன்கு தூண்டப்படுகிறது. கருவுற்ற பெண்ணுக்கு முத்தம் கொடுத்தால், அந்த மகிழ்ச்சியை வயிற்றுக்குள்ளே இருக்கும் குழந்தையும் அனுபவிக்கும்.

* கன்னத்தில் ஒருவர் கொடுக்கும் முத்தம், மரியாதையுடன், அன்பையும் காட்டும் முத்தமாகும். நண்பர்கள், பெற்றோர் கன்னங்களில் முத்தமிடுவார்கள்.


* தம்பதிகள் காது மடல்களின் பின்புறம், கழுத்து, தொப்புள் பகுதி, தொடைப்பகுதிகளில் கொடுக்கும் முத்தங்கள் கிளர்ச்சியைத் தூண்டும்.

* உதட்டோடு உதடு ஒட்டி கொடுக்கப்படும் ஒத்தட முத்தம் தம்பதியரின் உறவு பிணைப்பை அதிகரிக்கும். ஆக்சிடோசின் சுரப்புதான் இந்த பிணைப்பை உருவாக்குகிறது என கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

* இதய நோய்களுக்கான வாய்ப்புகள் முத்தம் கொடுப்பதால் குறையும். ரத்த அழுத்தமும் சீராகும்.


* தைராய்டு ஹார்மோன் சுரப்பை முத்தம் சீராக்குகிறது.

* முத்தம் கொடுக்கும்போது கிட்டத்தட்ட 112 வகையான தசைகள் தூண்டப்படுவதால் முகம் அழகாகிறது.

* முத்தம் கொடுக்கும்போது ஆண்களுக்கு ஆண் தன்மையும், பெண்களுக்கு பெண் தன்மையும் அதிகரிக்கும். கருப்பையும், விரைப்பையும் தூண்டப்பட்டு தாய்மையடைவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.


* முத்தம் கொடுப்பதும், வாங்குவதும் புத்துணர்ச்சியை உருவாக்கும்.

* உங்களை ஈர்த்தவரின் கண்களுக்கு இமைகளில் முத்தமிட்டு நன்றி சொல்லுங்கள். அவர் சொக்கிப்போவதுடன், அன்பை அள்ளி வீசுவார்.

* முத்தத்தால் முகத்தில் உள்ள தசைகளும், நரம்புகளும் தூண்டப்படுகின்றன.


* காதலர்கள் முதல் முத்தம் கொடுக்கும்போது மெதுவான இனிய முத்தமாக இருக்க வேண்டும். நீண்ட நேரம் முத்தமிடக் கூடாது. கைகளை அங்கங்களில் உலவ விடக் கூடாது.

இதழ்களில் தரப்படும் இனிமையான முத்தம் தரும் ஆனந்தம் மகிழ்ச்சியின் உச்சம். அன்பின் ஆழத்தைக் காட்ட உதடுகள்தான் சிறந்த இடம்.

* முத்தம் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களைச் சுரக்க செய்கிறது. முத்தத்தால் ஆக்சிடோசின், எண்டார்பின் ஆகியவை அதிகம் சுரப்பதால் உடல்வலி, கை-கால் வலி நீங்கும்.


ஆர்த்ரைடிஸ் வலி, மாதவிலக்கின்போது ஏற்படும் வலி, தலைவலி போன்ற வலிகளை நீக்கி முத்தம் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

* முத்தம் மூளைச் செயல்பாட்டைத் தூண்டி மனதையும், உடலையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

* உதடுகளால் முத்தமிடாமல் முத்தத்தடம்போல் பற்குறி பதிய, தோல் சிவக்க முத்தமிடுவது அசுர முத்தம். பிசாசு முத்தம் எனப்படுவது கழுத்தை ரத்தக் காட்டேறி கடித்து உறிஞ்சுவதுபோல் அன்புக்குரியவரை பிணைத்துக் கொண்டு பின்கழுத்தில் நீண்ட நேரம் முத்தமிடுவதாகும். தீவிர அன்பைக் காட்டும், இந்த வகை முத்தங்களுக்கு முன்னால் இணையிடம் அனுமதி பெற்றுக் கொள்வது நல்லது.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad