அழகான கவர்ச்சியான கண்கள் வேண்டுமா?? இவற்றை மட்டும் செய்யுங்கள்…!

முகத்திற்கு அழகை கொடுக்கும் கண்களை பராமரிப்பது மிகவும் அவசியமே. இயற்கை பொருட்களை பயன்படுத்தி கண்களில் ஏற்படும் குறைகளை போக்கி அழகான கண்களை பெறுங்கள். கண்களை சுற்றி ஏற்படும் கருவளையம் முக வசீகரத்தையே சேத படுத்தும்.

வழிமுறைகள் :
மிகவும் எளிதான முறை கண்களை எப்பொழுதும் குளிர்ந்த நீரினை கொண்டு கழுவ வேண்டும். அதிக நீர் அருந்துவதும் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்து கண் குறைபாடுகளை தடுக்கும் மற்றும் அழகான சருமத்தையும் கொடுக்கும்.

ஒப்பனை பொருள்களில் பயன்படும் ரோஸ் வாட்டரில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடென்ட் போன்றவை இருப்பதால் அழகை கூட்டுவதில் பெரும் பங்கு கொண்டு உள்ளது.

ரோஸ் வாட்டரில் துணியினை கொண்டு தோய்த்து சருமத்திற்கும், கண்களுக்கும், மூக்கில் ஏற்படும் கருமை நிறத்தை போக்கவும் பயன்படுத்தலாம்.

நல்ல சத்தான பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும் மற்றும் அதிகம் மடிக்கணினி, செல்போன், தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் கண்கள் பாதிக்கப்படுவது தடுக்கபடும்.

கண்களில் ஏற்படும் கருவளையத்தை போக்க செவ்வந்தி பூவில் இருந்து தயாரிக்க படும் டீயை தினமும் அருந்தலாம் அல்லது அதனை நீருடன் கொதிக்க விட்டு குளிர்ந்த நிலைக்கு வந்ததும் கண்களிருக்கு பயன்படுத்த நல்ல பலனை கொடுக்கும்.

சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்க வைட்டமின்கள், மினரல்கள் இருக்கும் உருளை கிழங்கை இரண்டாக நறுக்கி கண்களில் 10 முதல் 15 நிமிடங்கள் வைத்து கொள்ளுங்கள். தினம் இரு முறை செய்வதனால் கண்களில் ஏற்படும் கோடுகள், சுருக்கங்கள் மறையும்.

வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் தினம் வைக்க கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்து, மன சோர்வை போக்கும். சாறு கண்களில் இறங்கும். இதனை 20 நிமிடங்களை வரை வைத்து கொள்ள வேண்டும். பின்னர் நீரினை கொண்டு கண்களை நன்கு கழுவ வேண்டும்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad