யாழில் உறவு கொண்டால் கொரோனா வராது என கூறி மனைவியின் தங்கையுடன் கணவன் லீலை !!

யாழ் அரியாலைப் பகுதியில் நேற்று யாழ் போதனவைத்தியசாலை தாதி உதவியாளர் யாழ் மாநகரசபை ஊழியரான குடும்பஸ்தர் ஒருவரின் வாள் வெட்டுத் தாக்குதலிலில் இருந்து மயிரிழையில் உயிர்த்தப்பியுள்ளார். குறித்த தாதி உதவியாளர் தனது மனைவியின் தங்கையான இளம் குடும்பப் பெண்ணை ஏமாற்றி உடல் உறவுத் தொடர்பைப் பேண முற்பட்டதை அறிந்தே அப் பெண்ணி்ன் கணவனால் தாக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி பெற்றுள்ளவருடன் உடல் உறவு கொண்டால் கொரோனா வராது என தனது வீட்டுக்கு வந்த மனைவியின் தங்கைக்கு கூறியதுடன் அவளுடன் உறவு கொள்ளவும் ஆயத்தப்படுத்தியுள்ளார். இதற்காக அவளது வீட்டுக்கு கணவன் இல்லாத வேளைகளில் கடந்த சில நாட்களாக சென்று வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் மாநகரசபை ஊழியரின் தங்கையுடனும் தாதி உதவியாளர் இவ்வாறு வலை விரித்து கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்து அதனை நேரடியாக கேட்டுக் கொண்டிருந்த மாநகரசபை ஊழியர் பெரும் கோபமடைந்து தாதி உதவியாளரை கடுமையான விசாரணைக்கு உட்படுத்திய போதே அவரின் குட்டு வெளியாகியுள்ளது. இதனால் தாதி உதவியாளரைக் கடுமையாகத் தாக்கியதுடன் வாளினால் வெட்ட ஆயத்தப்படுத்திய போது அயலவர்கள் மற்றும் உறவினர்களால் அவர் காப்பாற்றப்பட்டு அப்பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகத் தெரியவருகின்றது.



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad