சிங்கள வர்த்தகர் மனைவியுடன் வவுனியா பொடியன் தொடர்பு.

குருநாகலைச் சேர்ந்த சிங்கள வர்த்தகர் ஒருவரின் மனைவியுடன் வவுனியாவில் பிரபல பாடசாலையைச் சேர்ந்த 20 வயதான மாணவன் ஒருவன் கள்ளத் தொடர்பில் இருப்பதை அறிந்த வர்த்தகர் அம் மாணவனைக் கொலை செய்வதற்கு முயன்று வருவதாகத் தெரியவருகின்றது.
குறித்த மாணவனும் வர்த்தகரின் மனைவியும் முகப்புத்தகம் மூலம் நட்பாகியுள்ளனர். அதன் பின்னர் பல தடவைகள் குறித்த மாணவன் குருநாகலுக்கு சென்று வர்த்தகர் வெளிநாடுகளுக்குச் செல்லும் நேரங்களில் மனைவியுடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டு வந்துள்ளான்.

வர்த்தகரின் வீட்டின் அருகில் உள்ள வீடு ஒன்றில் பூட்டியிருந்த கண்காணிப்புக் கமராவில் குறித்த மாணவன் வர்த்தகரின் வீட்டுக்குள் புகுந்து அடுத்தநாள் வெளியே வருவது வரையன காட்சிகளை அந்த வீட்டில் இருந்த வர்த்தகரின் நண்பர் வர்த்தகருக்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த வர்த்தகர் தனது வீட்டின் கண்காணிப்புக் கமராவை பரிசோதனை செய்த போது தான் வீட்டில் இல்லாத நேரங்களில் கண்காணிப்பு கமரா நிறுத்தப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து வர்த்தகர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது வர்த்தகர் இல்லாத நேரம் அங்கு வந்த மாணவன் அயல்வீட்டுக்காரனால் பிடிக்கப்பட்டுள்ளான். அவனிடம் மேற்கொண்ட விசாரணையின் போது வர்த்தகரின் மனைவியுடன் அந்தரங்கமாக இருப்பது அறியப்பட்டுள்ளது. இதனிடையே வர்த்தகரின் மனைவி பொலிசாருக்கு முறையிட்டதால் அங்கு வந்த பொலிசார் மாணவனை அயல்வீ்ட்டுக்காரரிடம் மீட்டு வெளியே அனுப்பியுள்ளார்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad