யாழில் பிணையில் வந்து போதைப்பொருள் விற்ற பெண் கைது!

யாழ்ப்பாணம், பொம்மைவெளியில் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் பிரதான சந்தேகநபரான பெண் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொம்மைவெளி பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான 38 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.

யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதை தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் குறித்த நபர் நேற்று இரவு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 2.40 கிராம் கெரோயின் பொலிஸாரினால் மீட்கப்பட்டது. குறித்த பெண் பல போதை பொருள் வழக்குகளுடன் சம்பந்தப்பட்டவர் என்பதுடன் ஏற்கனவே மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டவர் ஆவார்.

பிணையில் உள்ள நிலையிலும் போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டுவருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.




Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad