7 இலங்கையர்கள்அதிரடியாக கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் டுபாய் நோக்கிப் பயணிக்க முயற்சித்த 7 இலங்கையர்கள் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்றையதினம் கைதாகியுள்ளனர். இதன்போது அவர்களிடம் இருந்து அமெரிக்க டொலர், யூரோ மற்றும் ஸ்ரேலிங் பவுன் என்பன கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவின் பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்தார்.

இவ்வாறு சுமார் 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.