7 இலங்கையர்கள்அதிரடியாக கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் டுபாய் நோக்கிப் பயணிக்க முயற்சித்த 7 இலங்கையர்கள் சுங்க போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்றையதினம் கைதாகியுள்ளனர். இதன்போது அவர்களிடம் இருந்து அமெரிக்க டொலர், யூரோ மற்றும் ஸ்ரேலிங் பவுன் என்பன கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவின் பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்தார்.

இவ்வாறு சுமார் 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad