என்ன கொடூரம்…! பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு…. யார் அந்த நபர்?…. அமெரிக்காவை அதிர வைத்த சம்பவம்….!!!!

அமெரிக்காவில் உள்ள டென்வர் நகரில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சிலரை அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த சம்பவத்தால் பீதி அடைந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட தொடங்கினர். மேலும் அந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் இருந்து அருகில் இருந்த மற்றொரு இடத்திற்கு சென்ற அந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்த மர்ம நபரை சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர். பின்னர் அங்கு பலத்த காயங்களுடன் கிடந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த நபர் யார் ? இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன ? என்ற விசாரணையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad