காதலன் பிறந்த நாளுக்கு பணம் திருடி பியர் பார்ட்டி வைத்த மாணவி.

சிலாபம் கல்வி வலயத்தில் உள்ள முன்னணி பாடசாலையொன்றின் மாணவியொருவர் தான் காதலித்து வரும் மாணவன் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி, விருந்துக்கு செலவு செய்வதற்காக பெற்றோரிடம் இருந்து ரூ.20,000 திருடியதாக கூறப்படுகிறது.

இருப்பினும் வகுப்பறையில் பிறந்தநாள் விழா நடைபெறுவதாக தகவல் அறிந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிறந்தநாள் நிகழ்வை நிறுத்தினர். வீட்டில் திருடப்பட்ட பணத்தில் கேக், பிஸ்கட், இனிப்புகள் மற்றும் பியர் கான்கள் வாங்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

தொடர்புடைய மாணவ, மாணவிகளின் பெற்றோர்களை வரவழைத்த அதிபர், அவர்களின் பிள்ளைகளின் செயல்பாடுகள் குறித்து அதிக அக்கறையுடன் இருக்க வேண்டிய பொறுப்பு குறித்து விளக்கினார்.

இரண்டு மாணவர்களையும் இரண்டு வாரங்களுக்கு இடைநீக்கம் செய்த அதிபர், முறையான ஒழுக்காற்று விசாரணை நடத்துவதாகக் கூறினார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.

Below Post Ad