கிளிநொச்சியில் நெருப்பில் சூடு வைத்து அந்தரங்க பகுதிகளில் ஆண் நண்பர்களின் பெயரை எழுதிய மாணவிகள்.

பாடாலை மாணவிகள் சிலர் தமது தொடையில் ஆங்கில எழுத்துக்கள் பொறித்த நிலையில், பாடசாலை நிர்வாகத்தினால் எச்சரிக்கப்பட்டனர்.

கிளிநொச்சி, பளை பகுதியிலுள்ள பாடசாலை யொன்றில் சில வாரங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்தது.

15 வயதான மாணவிகள் சிலர் தமது தொடையில் ஆண் நண்பர்களின் பெயரை பொறித்துள்ளதாக பாடசாலை நிர்வாகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 5 மாணவிகள் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்கள் பெயர் பொறிக்கவில்லை. ஆங்கில எழுத்துக்களை மட்டுமே பொறித்திருந்தனர். குறிப்பிட்ட பெயர்களின் சுருக்கமாக அவை இருக்கலாமென பாடசாலை நிர்வாகம் சந்தேகித்தது.

நெருப்பில் சூடு வைத்து அந்த எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து மாணவிகள் எச்சரிக்கப்பட்ட, பெற்றோர் அழைக்கப்பட்டு அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad