பொலன்னறுவையில் வெளிநாட்டு பெண்ணை பலாத்காரம் செய்த 72 வயது கிழடு.

 பொலன்னறுவையில் உள்ள தொல்பொருள் இடங்களைப் பார்வையிடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் அதே தொல்பொருள் பிரதேசத்திலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலன்னறுவை சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் சுற்றுலாப் பயணிகளுக்கு பொருட்களை விற்பனை செய்பவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  பொலன்னறுவை ஹத்தமுனாபாறை பிரதேசத்தில் வசிக்கும் 72 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

போலந்து பிரஜையான 43 வயதுடைய இந்தப் பெண், பொலன்னறுவை பூஜை செய்யும் ஒன்றில்  வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக  பொலிஸில் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.




Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad