மர்மமான முறையில் உயிரிழந்த இளம் தாய்; தற்கொலையா? கொலையா?

 கொழும்பு - கண்டி வீதி   யக்கல  அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்து ஒரு பிள்ளையின் தாய் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு (16) யக்கல போகமுவ பிரதேசத்தில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தின் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்தே குறித்த பெண்  உயிரிழந்துள்ளதாக பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சதுரிகா மதுஷானி என்ற 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் ஏழு வயது மகளுடன் ஐந்து மாடி கட்டிடத்தின் நான்காவது மாடியில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

குறித்த மரணத்தில் சந்தேகம் எழுந்ததன் காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பெமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் சில காலமாக அடிக்கடி தகராறு நிலவியமையும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 சம்பவ இரவு  இருவருக்கும் இடையில், வாக்குவாதம் ஏற்பட்டதாக அவர்களின்  ஏழு வயது மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இளம் தாய்  உயிர்ழந்தமை  தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பெமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad