யாழில் பலருடன் உ.றவு கொண்ட 23 வயது பெண். பாலி.யல் தொற்று பரிசோதனைக்கு நீதிமன்றம் அனுமதி.

பருத்தித்துறையில் ஆண்களுடன் தகா.த உறவில் ஈடுபடும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம்பெண்ணை தடுத்து வைத்து, பா.லியல் தொற்றுநோய்களிற்கு உள்ளாகியுள்ளாரா என பரிசோதிக்க பருத்தித்துறை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

திருமணமான 23 வயதான இளம் பெண்ணே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை, சாரையடி பகுதியில் இன்று (31) அதிகாலை 1 மணியளவில் இந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியை சேர்ந்த இந்த இளம்பெண், பருத்தித்துறையில் நண்பியொருவருடன் தங்கியுள்ளார். அவர் சமூகப் பிறழ்.வில் ஈடுபடுகிறார் என்ற முறைப்பாடு பருத்தித்துறை பொலிசாருக்கு கிடைத்து, இரண்டு முறை பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டிருந்தார்.

மீண்டும் சமூக.ப்பிறழ்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். முச்சக்கர வண்டியொன்றுடன் அவர் நின்றபோது பொலிசாரால் கைது செய்யப்பட்டார். சாரதியும் அந்த இடத்தில் நின்றிருந்தார்.

ஏற்கெனவே திருமணமாகி 3 வயதில் அவருக்கு குழந்தையுள்ளது. அவர் தகா.த நடத்தையில் ஈடுபடுகிறார் என கணவர் பிரிந்து சென்று விட்டார். பிள்ளை தற்போது மாமனாரின் பராமரிப்பில் இருப்பதாக கைதான பெண் தெரிவித்துள்ளார்.

இரண்டு முறை எச்சரித்தும் திருந்தாமல் சமூக.ப்பிறழ்வில் ஈடுபட்டதால், அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைத்து, பாலி.யல் தொற்றுநோய் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறாரா என பரிசோதிக்க வேண்டுமென பருத்தித்துறை பொலிசார் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad