29 மாணவிகளை துஷ்.பிரயோகம் செய்த வாத்தி நீதிமன்றில்..

ஏறாவூர் பிரதேசத்தில் பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளை பாலி.யல் சேட்டை புரிந்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசேட விசாரணை நேற்று (31) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் அன்வர் சதாத் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது சாட்சியளிக்க 29 மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் ஆஜராகி மூடிய நீதிமன்றில் சிலர் சாட்சியளித்து குற்றம் சாட்டப்பட ஆசிரியரை அடையாளம் காட்டியதையடுத்து ஏனைய சாட்சிகளை எதிர்வரும் 2 ம் திகதி ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் ஆங்கில பாடம் கற்பித்து வந்த 55 வயதுடைய ஆங்கில ஆசிரியர் ஒருவர் அங்கு கல்விகற்று வந்த 7 ம் வகுப்பு மாணவிகளின் வகுப்பறையில் கற்பிக்க சென்ற நிலையில் மாணவிகள் சிலரிடம் தொடர்ந்து பாலி.யல் சேட்டை மற்றும் தகா.த வார்த்தை பிரயோகம் போன்ற செயற்பாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2019 ம் ஒக்டோபர் 19 ம் திகதி அவருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பொலிஸ் பிரிவில் பாதிக்கப்பட்ட மாணவிகள் முறைப்பாடு செய்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, வழக்கு தாக்குதல் செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார. எனினும். குற்றச்சாட்டு தொடர்பில் போதிய ஆதாரமில்லையென அவர் பிணையில் விடுதலையானார்.

இதனை தொடர்ந்து குறித்த வழக்கு கடந்த 3 வருடங்களுக்கு மேலாக மேலதிக விசாரணையின்றி இருந்து வந்துள்ள நிலையில், அவரிடம் முழுமையான விசாரணைகளை மேற்கொண்ட சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் சந்தேகநபரால் 29 சிறுவர்கள் பாலியல் துஷ்பி.ரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதை கண்டறிந்துள்ளனர்.

இதையடுத்து வழக்கு தொடர்பில் விசேட விசாரணை செய்யுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தர விட்டு, சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் நேற்று நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளை பிறப்பித்தார்

குறித்த வழக்கு விசேட விசாரணைக்காக நீதவான் முன்னிலையில் எடுக்கப்பட்டதையடுத்து, அங்கு குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர், அவருக்கு எதிராக சாட்சியளிப்பதற்காக 29 மாணவிகள் மற்றும் பாடசாலை ஆசிரியைகள், அப்போது கடமையாற்றிய அதிபர் உட்பட 40 பேர் சாட்சியமளிக்க ஆஜராகினர்.

இதன்போது ஆசிரியர் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராகாததையடுத்து, சாட்சிகள் தவிர்ந்த ஏனைய அனைவரையும் வெளியேறுமாறு உத்தரவிட்டு மூடிய நீதிமன்றில் 3 மாணவிகள் ஒரு ஆசிரியர் உட்பட 4 பேர் சாட்சியமளித்தனர்.

அதில் சாட்சியமளித்த 3 மாணவிகள் தற்போது சாதாரண தரத்தில் கல்வி கற்று வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் அந்த கால பகுதியில் மாணவிகளின் முதுகில் கையால் அடிப்பது மற்றும் தகா.தவார்தை பிரயோகம் கையடக்க தொலைபேசியில் ஆபா.சபடங்களை காண்பிப்பது உடலில் தொட்டு பேசி பா.லியல் சேட்டை விடுத்துள்ளதாகவும் இது தொடர்பாக வகுப்பாசிரியரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சாட்சியமளித்ததுடன் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரை அடையாளம் காட்டினர்.

இதனை தொடர்ந்து வகுப்பறை ஆசிரியர் சாட்சியளித்த நிலையில், அந்த கால பகுதியில் குறித்த வகுப்பறை ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ள போது மாணவிகள் ஆங்கில ஆசிரியர் தொடர்ச்சியாக பா.லியல் தொந்தரவு செய்வதாகவும் கையால் முதுகில் அடிப்பதாகவும், வாடி போடி என பேசுவதாகவும் அவரை மாற்றுமாறும் தன்னிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.

அதனை தொடாந்து அவர் கையால் அடிக்க கூடாது என பிரம்பு வாங்கி கொடுத்தும் அவர் கையால் அடித்துள்ளதாகவும் இது தொடர்பாக பிரதி அதிபரிடம் முறைப்பாடு செய்த நிலையில் அதிபர் என்னிடம் விசாரித்தபோது நடந்தவைகளை தெரிவித்ததாகவும் ஆசிரியர் தெரிவித்துள்ளார். பாடசாலை ஆசிரியர் ஒழுக்க குழுவைச் சேர்ந்த 3 ஆசிரியர்கள் குறித்த வகுப்பறைக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை செய்து அறிக்கை தயாரித்து சென்றனர் என சாட்சியளித்து ஆசிரியரை அடையாளம் காட்டினர்.

சாட்சிகள் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக குறித்த ஆசிரியரிடம் குறுக்கு விசாரணை செய்தபோது, அதற்கு அவர் எதுவித பதிலும் அளிக்காது மௌனமாக இருந்துள்ள நிலையில் ஏனைய சாட்சிகள் எதிர்வரும் 2ம் திகதி சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad