வவுனியாவில் கை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.

இரு கைகளும் கால் ஒன்றும் துண்டிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா , குறிசுட்ட குள நீரேந்து பகுதியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் இரு கைகளும் ஒரு காலும் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் , சுமார் 25 வயது மதிக்க தக்க இளம் பெண்ணொருவருடைய சடலமே மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ள ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad

எமது முகநூல் பக்கத்தினை லைக் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.