வவுனியாவில் கை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்பு.

இரு கைகளும் கால் ஒன்றும் துண்டிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா , குறிசுட்ட குள நீரேந்து பகுதியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் இரு கைகளும் ஒரு காலும் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் , சுமார் 25 வயது மதிக்க தக்க இளம் பெண்ணொருவருடைய சடலமே மீட்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ள ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad