யாழில் வாய் பேச முடியாத பெண்ணிடம் 21 பவுண் மோசடி.

வாய் பேச முடியாத பெண்ணிடம் 21 பவுண் தாலிக்கொடியை இரவலாக வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாய் பேச முடியாத பெண்ணொருவரிடம் , அயலவரான யுவதி ஒருவர் கொண்டாட்டங்களுக்கு செல்லும் போது , தாலிக்கொடியை இரவலாக பெற்று அணிந்து சென்ற பின்னர் அதனை மீள அப்பெண்ணிடம் கையளிப்பதனை வழமையாக கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் வழமை போன்று , தாலிக்கொடியை இரவலாக வாங்கி சென்ற யுவதி , தாலிக்கொடியை திருப்பி கொடுத்த போது , கொடியின் அமைப்பில் வித்தியாசத்தை உணர்ந்த தாலிக்கொடியை இரவல் கொடுத்த பெண் , அதனை நகைக்கடை ஒன்றில் சோதித்த போது , அது போலியானது (கவரிங்) என தெரியவந்துள்ளது.


அதனை அடுத்து குறித்த பெண் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , அயலவரான யுவதியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த போது , சுன்னாகம் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் இரவலாக பெற்ற தாலிக்கொடியை விற்று விட்டு , அதே போன்று போலி தாலிக்கொடியை (கவரிங்) செய்து , அதனை அப்பெண்ணிடம் கொடுத்தமை தெரிய வந்துள்ளது.

குறித்த யுவதியை பொலிஸார் தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad