தனியாக நீர் எடுக்க சென்ற 6 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம்.

மதுரங்குளிய விருத்தோடு பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கச் சென்ற போதே கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விருதோட் மதுரங்குளி பிரதேசத்தில் வசிக்கும் 06 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad