சுவிஸ் மாப்பிளை என கூறி அம்மா மகளுடன் உறவு. மகளை கர்ப்பமாக்கி தலைமறைவு.

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியில், 18 வயதான மாணவியை கர்ப்பமாக்கிய பின், தர்மலிங்கம் குகநேசன் எனும் 30 வயதானவன் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளான். குகநேசனின் சொந்த இடம் மட்டக்களப்பு எனத் தெரியவருகின்றது. நீண்டகாலம் மலேசியாவில் தங்கியிருந்து தொழில் பார்த்து வந்த குகநேசன், கடந்த வருட நடுப்பகுதியில் வவுனியாவில் வந்து தங்கியிருந்துள்ளான். 

அங்குள்ள விடுதி ஒன்றில் சில நாட்கள் தங்கியிருந்ததாகத் தெரியவருகின்றது. இவ்வாறு தங்கியிருந்த போது தன்னை சுவிஸ்லாந்திலிருந்து சுற்றுலாவுக்காக இலங்கை வந்ததாக தெரிவி்த்துள்ளான். வவுனியா பாஸ்போட் அலுவலகத்தில், பாஸ்போட் பெறுவதற்கு வந்திருந்த முல்லைத்தீவு மல்லாவிப்பகுதியைச் சேர்ந்த 39 வயதான குடும்பப் பெண் மற்றும் அந்தப் பெண்ணி்ன் கணவர், 17 வயதான மகள் மற்றும் 15 வயதான மகன் ஆகியோரும், வவுனியாவில் குகநேசன் தங்கியிருந்த விடுதியில் ஒரு நாள் தங்கியிருந்துள்ளனர். 

அதன் போது குகநேசனுக்கும் குறித்த குடும்பத்திற்கும் இடையில் நட்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் குறித்த குடும்பப் பெண் பல தடவைகள் பாஸ்போட் அலுவல்களுக்காக வவுனியாவுக்கு தனியே வந்து சென்றுள்ளார். இதன் போது குகநேசனுக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையில் உடல்ரீதியான தொடர்புகள் பேணப்பட்டுள்ளது. அத்தடன் குறித்த பெண்ணுக்கும் தான் சுவிஸ் என கூறி மகளை திருமணம் செய்ய ஆசைப்படுவதாகவும் குகநேசன் கூறியுள்ளான். இதனையடுத்து பலதடவைகள் மல்லாவிக்கு குறித்த குடும்பப் பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளான். இதனால் சந்தேகமடைந்த கணவன் தனது மனைவியை தாக்கியுள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் மனைவி காயமடைந்து வைத்தியசாலையி்ல அனுமதிக்கப்பட்டு பொலிஸ் விசாரணைகள் நடைபெற்று கணவன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளான். அதன் பின்னர் கணவர் தனது குடும்பத்தை பிரிந்து தனது பிறந்த இடமான ஜெயபுரத்தில் வசித்துவந்துள்ளார். இதன் பின்னர் குகநேசனுடன் தாயும், மகளும் பலதடவைகள் வவுனியா மற்றும் கொழும்புக்கு சென்று வந்துள்ளார்கள். தனது மகனை தனது உறவினர்களுடன் விட்டுவிட்டே இருவரும் குகநேசனுடன் திரிந்துள்ளார்கள்.

இந் நிலையில் குடும்பப் பெண்ணின் மகள் 2 மாத கர்ப்பிணி என கடந்த பெப்ரவரி மாதம் மருத்துவப்பரிசோதனைகளின் போது தெரியவந்துள்ளது. இந் நிலையில் இது தொடர்பாக குகநேசனுக்கு தாயார் தெரியப்படுத்தியுள்ளார். அதன் பின்னர் குகநேசன் வவுனியாப் பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளான். அவனது தொலைபேசியும் செயல்இழந்துள்ளது. இந் நிலையில் தனது காதலனைக் காணவில்லை என வவுனியா பொலிசாரிடம் மகள் முறையிட்டுள்ளாள். 

பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் குகநேசன் மலேசியாவில் வேலை வாய்ப்பு பெற்ற ஒருவர் என்பதும் மட்டக்களப்பைச் சேர்ந்தவன் என்பதும் அறியப்பட்டுள்ளது. அத்துடன் அவன் மலேசியாவுக்கு மீண்டும் சென்றுவிட்டதாகவும் பொலிசார் அறிந்துள்ளார்கள். தற்போது குடும்பப் பெண்ணின் மகள் குகநேசனால் கர்ப்பமாக்கப்பட்டு 5 மாத கர்ப்பிணியாக நடுத்தெருவில் விடப்பட்டுள்ளாள்.

குகநேசன் இதே போல் பல பெண்களை ஏமாற்றி உறவு கொண்டதுடன் அவர்களிடமிருந்து பணம், நகைகளைப் பெற்றுள்ளதாகவும் மட்டக்களப்பு மற்றும் வவுனியா போன்ற இடங்களில் முறைப்பாடுகள் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

குகநேசனின் வட்சப் இலக்கத்தில் இருந்த புகைப்படத்தை தவிர குகநேசன் சமூகவலைத்தளங்களில் தொடர்புகள் பேணாது இருந்துள்ளான் எனத் தெரியவருகின்றது. இருப்பினும் அவனது  புகைப்படங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என குடும்பப் பெண் மற்றும் மகள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்கள்.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad