யாழ் சிறைக்குள் பீடியுடன் வந்த அம்மா. நையப்புடைக்கப்பட்ட கைதி.

யாழ்பபாணம் சிறைச்சாலையில் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட இரண்டு விளக்கமறியல் கைதிகளும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் கடத்தல் வழக்கொன்றில் கைது செய்யப்பட்டு, 7 மாதங்களாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை பார்வையிட வந்த தாயார், இரகசியமாக பீடி வழங்கியுள்ளார்.

பீடியை சிறைச்சாலைக்குள் கடத்தி வந்தபோது, சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் சிக்கியதை தொடர்ந்து, இரண்டு கைதிகள், சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

பீடி கடத்தியவரும், பீடி கடத்தப்படுவதை தெரிந்திருந்தும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் தகவலளிக்காத மற்றொரு கைதியுமே தாக்கப்பட்டனர்.

நேற்று அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாம் தாக்கப்பட்டதாக அவர்கள் நீதிபதியிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவர்களை சட்டவைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டது.

கொக்குவில் மேற்கு பகுதியை ஒருவரும், ஊர்காவற்றுறை பகுதியை சேர்ந்த ஒருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாக்கப்பட்ட கைதிகளின் உறவினர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்திலும் முறையிட்டுள்ளனர்.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad