நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா வைச் சேர்ந்த சிவானந்தா என்ற துறவி தனக்கு 120 வயதாகிறது எனத் தெரிவித்துள்ளார். யோகா, பிரம்மச்சரியம் ஆகியவைதான் தனது நீண்ட ஆயுளுக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்து துறவியான அவர் 1896 ஆகஸ்ட் 8-ம் தேதி பிறந்தவர் என அவரது பாஸ்போர்ட் தகவல் கள் தெரிவிக்கின்றன. இந்த பிறந்ததேதி, கோயில் பதிவேடு கள் மூலம் பாஸ்போர்ட் அலுவல கத்தால் சரிபார்க்கப்பட்டுள்ளன.

இதுவரை பூமியில் வாழ்ந்த வர்களில் அதிக காலம் வாழ்ந்தவராக ஜப்பானைச் சேர்ந்த ஜிரோமாந் கிமுரா கருதப்படுகிறார். கடந்த 2013 ஜூன் மாதம் உயிரிழந்த அவர் 116 ஆண்டுகள் 54 நாட்கள் உயிர்வாழ்ந்துள்ளார்.

சிவானந்தாவின் வயது 120 என உறுதி செய்யப்பட்டால், அவர்தான் இந்தியா மற்றும் உலகிலேயே மிக வயதானவர் என்ற பெருமையைப் பெறுவார். மேலும் மூன்று நூற்றாண்டுகளிலும் வாழ்ந்தவர் என்ற பெருமையும் கிடைக்கும்.

தனக்கு 120 வயதானதை சாதனை யாகப் பதிவு செய்ய சிவானந்தா கின்னஸ் சாதனைக்கு விண்ணப் பித்துள்ளார்.

“எனக்கு விளம்பரத்தில் பிரியம் இல்லை. எனவே இதுதொடர்பாக வெளியில் தெரிவிக்காமல் இருந் தேன். ஆனால் எனது அன்பர்கள் கேட்டுக்கொண்டதால் கின்னஸுக்கு விண்ணப்பித்துள்ளேன்” என சிவானந்தா தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகங்கள் இவரைப் பற்றிய செய்தியை வெளியிட் டுள்ளன. 120 ஆண்டுகள் எனக் கூறி வரும் சிவானந்தா மிக நல்ல உடல் நலத்துடன் உள்ளார். தனியாகவே தனது பணிகளைச் செய்து கொள்கிறார். ரயிலிலும் தனியாகவே பயணிக்கிறார். ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரம் உடைய சிவானந்தா, தரையில் துணியை விரித்து, தலைக்கு மரக்கட்டை வைத்துப் படுக்கிறார். தினமும் யோகாசனம் செய்கிறார்.

“பால், பழங்களைத் தவிர்த்து விடுவேன். சிறு வயதில் நிறைய நாட்கள் பட்டினியாக தூங்கியிருக் கிறேன். யோகா, ஒழுக்கமான வாழ்வு, பிரம்மச்சரியம் இவைதான் என் நீண்ட ஆயுளுக்குக் காரணம். எளிமையான ஒழுக்க வாழ்வை வாழ்கிறேன்.

வேக வைத்த உணவு களை எடுத்துக்கொள்கிறேன். மசாலாப் பொருட்கள், எண்ணெய் வகைகளை சேர்த்துக் கொள்வ தில்லை. அரிசி, வேகவைத்த பருப்பு, ஒன்றிரண்டு பச்சை மிளகாய் இவைதான் என் உணவு” என சிவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் ஆட்சிக்காலத்தில் மின்சாரம், கார்கள், தொலைபேசி இல்லாத காலகட்டத்தில் பிறந்த சிவானந்தா, தொழில்நுட்ப வசதி களால் பெரிதும் ஈர்க்கப்படவில்லை.

“முன்பு கொஞ்சம் பொருட்களை வைத்துக் கொண்டு மக்கள் மகிழ்ச்சி யாக இருந்தார்கள். தற்போது மகிழ்சியின்றியும், ஆரோக்கிய மின்றியும், நேர்மையற்றும் இருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக் கியமாகவும், அமைதியாகவும் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” என அவர் தெரிவித் துள்ளார்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad