மூன்று நாட்களாக சுவரின் இடுக்குக்குள் இருந்து வந்த அபாயக் குரல்: அமானுஷ்யமா? இறுதியில் அதிர்ச்சிக்குள்ளான மக்கள்

மூன்று நாட்களாக உணவின்றி சுவரின் இடுக்குக்குள் சிக்கி தவித்த சிறுவன் ஒருவன் பிரதேச வாசிகளால் மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவமொன்று நைஜிரியாவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

நைஜிரியாவின் ஒன்டோ பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒடுடூவா பகுதியில் வசித்து வந்த அதுர்காபெமி சகா என்ற 12 வயதுடைய ஏழைச் சிறுவன் தனது வீட்டின் மதிலில் ஏறி விளையாடியுள்ளான்.

இந்நிலையில் குறித்த சிறுவன் மதிலின் 12 அங்குலமான இடுக்கு பகுதியில் விழுந்துள்ளான்.

குறித்த சிறுவன் முடுக்கு பகுதியிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு கூக்குரல் எழுப்பிய போதும் பிரதேசவாசிகள் ஏதோ அமானுஷ்சிய குரல் என நினைத்து கேட்டும் கேட்காமல் சென்றுள்ளனர்.

மூன்று நாட்கள் கடந்தும் தொடர்ச்சியாக அபாய குரல் கேட்கப்படுதை
சந்தேகித்த பிரதேச வாசிகள் அபாய குரல் கேட்கப்படும் இடத்தை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.

இதன்போது குறித்த சுவரின் இடுக்கு பகுதியில் பிரதேசத்தின் சிறுவன் சிக்கியிருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக சுவரை இடித்து சிறுவனை காப்பாற்றியுள்ளனர்.

சிறுவன் மூன்று நாட்களாக உணவின்றி ஒரே நிலையில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டமை தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad