மனைவியைக் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய கணவன்

புனேயில் மென்பொறியிலாளரொருவர் தனது மனைவியைக் கொன்று சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தவர் ராகேஷ் (வயது 34). அவரது மனைவி சோனாலி (வயது 28). இவர்களுக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் திருமணமானது.
இந்த தம்பதிக்கு பிள்ளைகள் இல்லை என்ற போதிலும் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், குடும்ப விவகாரங்களை சோனாலி தனது நண்பர்களுடன் சமூகவலைத்தளத்தினூடாக பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. இதனால், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்தே ராகேஷ் தன் மனைவியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதற்கேற்ப, தற்கொலைக்கு முன்னதாக மராத்தி மொழியில் ராகேஷ் எழுதியுள்ள கடிதத்தில் கொலைக்கு தானே காரணம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்திலிருந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad