யாழில் 13 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து பலதடவை துஷ்பிரயோகம்.

வீட்டு வேலைகளுக்கு என 13 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 13 வயது சிறுமியை தனது வீட்டு வேலைக்கு என சிறுமியின் பெற்றோரிடமிருந்து சிறுமியை நீண்ட காலமாக அழைத்து சென்று வந்துள்ளார்.

வீட்டுக்கு அழைத்து செல்லும் நபர் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார்.

இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமியை , வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி, அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு மன்று கட்டளையிட்டுள்ளது.

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

Below Post Ad