நடமாடும் சொகுசு விடுதிகள். சீரழியும் மாணவர் வாழ்க்கை.

இரத்தினபுரி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகரித்து
வரும் விபச்சார கலாசாரம் குறித்து பெரும் அசௌகரியங்களை தாங்கள் எதிர்கொள்வதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையால் இளம் தலைமுறையினர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் பெருமளவு சீர்கெடும் நிலைமைகளுக்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் விடுதிகளில் இடம்பெற்று வந்த இந்த விபச்சாரத் தொழில், பொலிஸாரால் சுற்றி வளைக்கப்படுவதால் நவீன முறையில் நடமாடும் விபச்சார விடுதிகளாக சூட்சுமமான முறையில் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக முச்சக்கரவண்டிகள் அதிகமாக பயன்படுத்தப்படுவதாகவும், இவற்றுக்கு அடிமையானோர் தங்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு முச்சக்கர வண்டிகளில் அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு விபச்சாரத்துக்கு அடிமையாளோரிடம் அதிகமான தொகை கறக்கப்படுவதாகவும், இவ்விடயத்தில் இளம்பராய இளைஞர்களுடன் பாடசாலை மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதும் கட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இவ்விடயத்தில் பொலிஸாரின் செயற்பாடுகள் அதிகரிக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதோடு, தமது வீடுகளிலிருந்து வெளியேறும் இளைஞர்கள், மானவர்கள் விடயங்களில் அவதானத்துடன் செயற்படுமாறு பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad