கொலை மிரட்டல்:திருமணத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு கேட்ட இளைஞன்!

உத்திர பிரதேசத்தில் தலித் இளைஞர் ஒருவர் தனது திருமணத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு கேட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகோபா மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அலக் ராம்.

இவரது கிராமத்தில் திருமணத்தின் போது மணமகன் குதிரையில் வருவது வழக்கம், ஆனால் இவர் தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் கிராமத்தில் உள்ள உயர் சாதிப்பிரிவினர் இவரைக் குதிரையிலெல்லாம் பவனி வரக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த நபர் தனது திருமணத்திற்கு பொலிசாரிடம் பாதுகாப்பு கேட்டுள்ளதோடு, பொலிசாரும் இவரை விழிப்புடன் கவனித்து வருகின்றனர்.

இதுகுறித்து இளைஞர் கூறுகையில், ''எங்கள் கிராமத்தில் பல ஆண்டுகளாகக் குதிரை சவாரியுடன் தான் பழம் மரபுகள் படி திருமண ஊர்வலம் நடத்துகிறோம். எனக்கும் குதிரையில் வலம் வரும் ஆசை உள்ளது. ஆனால் சில உயர்சாதிப்பிரிவினர் என்னைக் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார்கள்'' எனக் கூறியுள்ளார்.

அலக் ராமின் தந்தை கயாதின் கூறுகையில், ‘என் மகனுக்கு ஜூன் 18ம் தேதி திருமணம், அதில் தான் குதிரையில் ஏறி ஊர்வலமாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.

ஆனால் இப்போது காவல்துறையில் புகார் அளித்துப் பாதுகாப்பு பெறலாம். ஆனால் பின்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டுகின்றனர்’ என்று தெரிவித்துள்ளார். 



Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad