அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரிந்த நபர் 14 லட்சத்துடன் மாயம்.
SriraamSeptember 12, 2021
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள களனிகம டோல்
கேட்டில் பணி புரிந்துவந்த இரண்டு பண பெட்டிகளுக்கு பொறுப்பாக இருந்த காசாளர் அங்கிருந்த 14 இலட்சம் பணத்துடன் தலைமறைவாகி உள்ளார்.
இது தொடர்பாக பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று (11) வேலைக்கு வந்த மற்றொரு தலைமை காசாளர் பணம் கணக்கிடும் போது அது தெரியவந்துள்ளது மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.