யாழில் 30 வயது யுவதிக்கு கலியாணம் கட்டச் சொல்லி தொடர்ச்சியாக காதல் அம்பு விட்ட 70 வயது மன்மதனுக்கு சிறை!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 30 வயதான இளம்பெண்ணிற்கு தொல்லை கொடுத்து வந்த 70 வயதான முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. கரணவாய் குருக்கள் பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணை, திருமணம் செய்யுமாறு தொல்லை கொடுத்த, கரவெட்டி மத்தொணி பகுதியைச் சேர்ந்த 70 வயதான முதியவரே, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியில் உள்ள அரச நிறுவனம் ஒன்றில் அந்த இளம்பெண் பணிபுரிந்து வருகிறார். அவர் மீது காதல் வசப்பட்ட 70 வயதான முதியவர், அவரை நிழல் போல பின்தொடர்ந்து வந்துள்ளார். பாடசாலை கால காதல் இளவரசர்களே மிரளும் அளவிற்கு காதல் வெறியுடன், அந்த தாத்தா, ரோமியோவாக மாறியிருந்தார்.

ஓய்வூதியரான அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். தன்னை நம்பி வருமாறும், அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என்றும் அவர் நச்சரித்து வந்துள்ளார். இந்த ‘கொடூர சம்பவத்தால்’ பாதிக்கப்பட்ட பெண், நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு முறை முறைப்பாடு செய்துள்ளார். பொலிசார் தாத்தாவை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.எனினும், அந்த எச்சரிக்கைகளால் காதல் தாத்தாவின் வெறி அடங்கவில்லை. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்பெண் நெல்லியடி நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டிருந்த பொழுது, அங்கும் வந்து தொல்லை கொடுத்துள்ளார். இதனை அடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளார்கள்.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad