கள்ளக்காதலியின் நடத்தையில் சந்தேகம் -கழுத்தை நெரித்து கொன்ற வாலிபர் தலைமறைவு

கள்ளக்காதலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதும் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் மீது கொலை, கொலை முயற்சி. அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தெரியவந்திருக்கிறது.

சென்னையை அடுத்த புழல் லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழரசன். 32 வயதான இந்த வாலிபருக்கு. திருமணம் ஆகிவிட்டது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

தமிழரசனுக்கு சபரிதா என்கிற இருபத்தி எட்டு வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. சபரிதாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் . மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த தமிழரசனும் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த சபரிதாபம் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல் வாழ தொடங்கியிருக்கிறார்கள். கடந்த 6 மாதமாக இப்படி அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் சபரிதா அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்திருக்கிறார். இதனால் தமிழரசனுக்கு சந்தேகம் எழுந்ருக்கிறது. அவரது நடத்தையில் சந்தேகப்பட்ட அவர் இதுகுறித்து அடிக்கடி கேட்டு சண்டை போட்டிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கடும் விவாதம் நடந்து வந்திருக்கிறது. நேற்று காலையும் அப்படித்தான் சபரிதா அவரிடம் இது குறித்து கேட்க, அவரும் அதற்கு அலட்சியமாக பதில் சொல்ல, ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். அவர் இறந்துவிட்டது தெரிந்ததும் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது சபரிதா உயிரிழந்து கிடந்ததும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய தமிழரசனை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் மீது மீஞ்சூர், காட்டூர் காவல் நிலையங்களில் கொலை ,கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் இருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது.

 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad