சிறுமிக்கு நடந்தது என்ன? பதறும் பெற்றோர் – பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறை (படம்)

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதான சிறுமி ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி முதல் சிறுமி தொடர்பில் தகவல் இல்லை என மஹரகம காவல்துறையினருக்கு பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் காணாமல் போன சிறுமி தொடர்பில் எந்தத் தகவலையும் கண்டறிய முடியவில்லை.

5 அடி 3 அங்குல உயரம் கொண்ட மஹரகம நாவின்ன பகுதியைச் சேர்ந்த நேஹா கௌமதி ஹேரத் என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

அவர் காணாமற்போனபோது பச்சை நிற ரி-சேர்ட் மற்றும் கருப்பு பெரிய பான்ட் அணிந்திருந்தார் என கூறப்படுகிறது.

இந்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்தால் மஹரகம காவல் நிலைய பொறுப்பதிகாரி 071 859 1645 அல்லது மஹரகம காவல் நிலையத்தின் 0112 850222 அல்லது 0112 850 700 ஆகிய இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad