மாமனாரை தாக்கி கொலை செய்த மருமகன்

புத்தளம் சேகுவந்தீவு பகுதியில் மது போதையினால் மாமனாரை தாக்கி மருமகன் கொலை செய்துள்ளதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவமானது வாய்த்தர்க்கம் முற்றிய நிலையிலேயே நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் தழுவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளார்.

கொலை செய்த சந்தேக நபர் புதுவருடமன்று குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையினால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினமே விடுதலை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags

Top Post Ad

இந்த பதிவினை பகிர்வதற்கு

எமது முகநூல் பக்கத்தினை Follow 🤞செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றிடுங்கள்.👇👇

Below Post Ad