கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன். ஆழ்ந்த அனுதாபங்கள்.

காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்க சென்று நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு
காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்க சென்ற சிறுவர்கள் 7பேரில் ஒருவர் கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த சிறுவர்களே இன்று குளிக்கச்சென்றுள்ளனர்.

இதன்போதே 13 வயது மதிக்கத்தக்க சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவனை தேடும் பணியில் தற்போது பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags

Top Post Ad

Below Post Ad